search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்பி மோகம்"

    • ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மூன்று நாட்களாக நவீன் குமார் உடலை தேடி வந்தனர்.
    • வாலிபர் விழுந்த இடத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் முட்செடிகளுக்கு இடையே சிக்கி இருந்த உடலை மீட்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அருகே உள்ள குருவாயல் ஊராட்சியை சேர்ந்த ஆரிக்கம்பட்டு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்த நவீன்குமார் (வயது20) என்ற வாலிபர் கடந்த புதன்கிழமை மாலை தனது நண்பர்களுடன் ஆரிக்கம்பட்டு கிராமத்தில் உள்ள திருக்கண்டலம் தடுப்பணையின் மேற்பகுதிக்கு சென்று செல்பி எடுத்தபோது திடீரென தவறி கொசஸ்தலை ஆற்று வெள்ள நீரில் விழுந்தார்.

    உடனடியாக வெங்கல் காவல் நிலைய போலீசாருக்கு கிராமமக்கள் தகவல் அளித்தனர். மேலும், ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மூன்று நாட்களாக நவீன் குமார் உடலை தேடி வந்தனர். ட்ரோன் கேமரா, பைபர் படகு உள்ளிட்டவைகளின் உதவிகளுடன் தேடினர்.

    இந்நிலையில், அந்த வாலிபர் விழுந்த இடத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் திருக்கண்டலம் தனியார் செங்கல் தொழிற்சாலைக்கு எதிரே ஆற்றின் நடுவில் முட்செடிகளுக்கு இடையே சிக்கி இருந்த அவரது உடலை மீட்டனர். இதன் பின்னர் வெங்கல் காவல் நிலைய போலீசார் நவீன் குமார் உடலை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீரை அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட்டனர்.
    • ஆற்றங்கரையில் வசிக்கும் பொதுமக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    பெரியபாளையம்:

    மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீரின் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஏரியின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீரை அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட்டனர். எனவே, ஆற்றங்கரையில் வசிக்கும் பொது மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், ஆற்றில் யாரும் குளிக்க கூடாது, துணி துவைக்க கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அருகே உள்ள குருவாயல் ஊராட்சியை சேர்ந்த ஆரிக்கம்பட்டு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்த நவீன்குமார்(வயது20) என்ற வாலிபர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஆரிக்கம்பட்டு கிராமத்தில் உள்ள திருக்கண்டலம் தடுப்பணையின் மேற்பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர், நவீன்குமார் செல்பி எடுத்தாராம். அப்போது நவீன்குமார் திடீரென தவறி கொசஸ்தலை ஆற்று வெள்ள நீரில் விழுந்துள்ளார்.

    இதனால் செய்வது அறியாமல் நண்பர்கள் கூக்குரல் இட்டனர். ஆனால் நவீன் குமார் கண்ணிமைக்கும் நேரத்தில் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதைக் கண்டு நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வெங்கல் காவல் நிலைய போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். மேலும், ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். 10 பேர் கொண்ட மீட்பு குழுவினர் விரைந்து வந்து ட்ரோன் கேமரா, பைபர் படகு உள்ளிட்டவைகளின் மூலம் இன்று காலை முதல் தேடி வருகின்றனர். ஆனால், நவீன்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    ×